படத்தில் நாம் காணும் இந்த சாலை சந்திப்பு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் மூன்றாம் தெருவின் நடுவில் இருக்கும் சாலை சந்திப்பாகும். இச்சந்திப்பின் கீழ்புறச் சாலை திருவா ரூர் செல்லும் கீழப் பாலத்தையும், மேல்புறச் சாலை நகரத்தையும் இணைக்கிறது. தென்புறம் டெப்போ சாலையையும் வடப் புறம் நடுவாணியர் தெருவையும் இச்சந்திப்பு இணைக்கிறது. மன்னார்குடி நகரத்திலேயே தினமும் விபத்து நடக்கும் ஒரே சந்திப்பு இது என லாம். இந்த சந்திப்புக்கு அருகில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனைக்கு வந்த ஒருவர் கூறுகை யில், “போன வாரம் திங்கட்கிழமை இந்த மருத்துவமனைக்கு வந்த போது தடார் என்ற சத்தம் ரோட்டில் கேட்டது. அதிர்ச்சிய டைந்து பார்த்தோம். கீழப்பாலத்தில் இருந்து படுவேகமாக வந்த ஒரு கார், நடுவாணியர் தெருவில் இருந்து வந்த மோட்டார் பைக்கின் மீது மோதி, அதன் பய ணியோடு தரையில் இழுத்தவாறே 50 அடி தள்ளிச் சென்றது. தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அந்த நபர், முதல் உதவிக்கு பின் திருவாரூருக்கு அனுப்பப்பட் டார். அவர் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை” என்றார். தினம் தினம் ஏதேனும் ஒரு விபத்து இந்த இடத்தில் தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. ஆனால் பெரும்பாலான இந்த இடத்தின் விபத்துகள் காவல்துறை யில் புகார் செய்யப்பட்டு, வழக்காகாமல்
லோக்கல் பஞ்சாயத்துகள் மூலமாகவே முடிந்திருப்பதாகவே தெரிகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் இருந்து வரும் பேருந்துகள் சாலையின் தென்புறம் உள்ள அந்த தனியார் மருத்துவமனை எதிரில் நிற்கும். அப்போது தென்புறம் டெப்போ சாலையில் இருந்து இரு சக்கர வாக னத்தில் வருபவர்கள் சற்று கவனக்குறை வாக பேருந்தை தாண்டி கிழக்கே திரும்பி னாலும் அதோ கதிதான். அதேபோல நகரத்திலிருந்து வரும் பேருந்துகள் வடதிசையில் நிற்கும். அப் போது வடபுறம் நடுவாணியர் தெருவில் இருந்து, இருசக்கர வாகனத்தில் வருப வர்கள் சற்று கவனக்குறைவாக பேருந்தை தாண்டி மேற்கே நகருக்கு திரும்பினா லும் இதே கதிதான். கிழக்கு மேற்கே நீளும் இந்த மாநிலச் சாலை, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நேர் சாலையா கும். எனவே சராசரியாக 70 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் பறந்து செல் கின்றன. இந்த டெரர் சந்திப்பை பற்றி சிஐடியு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத் தின் நாகை மண்டல துணைச் செயலாளர் எம்.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் செல்லும் கழக பேருந்து களின் எங்கள் ஓட்டுநர்கள், இந்த சந்திப் பில் கூடுதல் பொறுப்போடு எச்சரிக்கையாக கடந்து ஓட்டிச் செல்வார்கள். ஆனால் மற்ற வர்களுக்கு இந்த ஸ்ட்ரைட் ரோடு அலட்சி யம்தான். பகலில் 70, 80, 90, இரவு நேரங்களில் 100 கிலோ மீட்டருக்கு மேலான வேகத்தில் கார், லாரி, வெளி மாநிலங்களில் இருந்து வரும் சொகுசு பேருந்துகள் அபா யம் தெரியாமல் இச்சந்திப்பை கடந்து செல்கிறார்கள். ஒரு மாடோ, ஆடோ அல்லது சிறுவர்களோ நடுவாணியர் தெருவில் இருந்தோ அல்லது டெப்போ சாலையில் இருந்தோ, ஏதேனும் ஒரு சைக்கிள் அல்லது இருசக்கர வாகனம் அல்லது ஒரு டெம்போ திடீரென இச்சாலையில் ஏறினால், கிழக்கே இருந்து அதிவேகத்தில் வரும் எந்த ஒரு வாக னமும் நிலை தடுமாறி பலபேரை காவு வாங்கும் மிகப்பெரும் விபத்து நடை பெறும் வாய்ப்புள்ளது. நினைப்பதற்கே அச்சமூட்டும் செய்தி இது. மேலும் இச்சந்திப்பில் ஏதோ ஒரு கிராஸ் போக்குவரத்தில் நிலை தடுமாறும் ஒரு ஓட்டுநர் அருகில் இருக்கும் வீடு, கடைகளைக் கூட இடித்து சேதப்படுத்தி, தானும் மரணத்தை தழுவும் அபாயமும் ஏற்படலாம். இதை தவிர்க்க வேண்டும் என்றால், சந்திப்பிற்கு கிழக்கே நூறு அடியில் ஒரு வேகத்தடையையும் மேற்கே 100 அடி தூரத்தில் மற்றொரு வேகத்தடையையும் தாமதிக்காமல் உடனே அமைக்க வேண்டும். நெடுஞ் சாலை துறை மட்டும் இதற்கு பொறுப்பு அல்ல; நகரப் போக்குவரத்து காவல்துறைக் கும் மன்னார்குடி நகராட்சிக்கும் கூடுதல் பொறுப்பு உண்டு” என்றார். சாலை பணி இன்னும் முடிவடையா மல் உள்ளதால், வேகத்தடைகள் போடப் படவில்லை என்று கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் இந்த வாதம் முற்றிலும் தவறானதாகும். கோர விபத்தை தவிர்க்க வேண்டும் என்றால் தற்காலிகமாகவாவது வேகத்தடைகள் உருவாக்கப்பட வேண்டும். இனியாவது கவனத்தில் கொள்ளுமா நெடுஞ்சாலைத்துறை?
- நீடாசுப்பையா