ஸ்ரீவில்லிபுத்தூர், நவ.7- திருவில்லிபுத்தூர் வட்டம் பிள்ளையார்நத்தம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட மேல தொட்டிய பட்டி கிராமம் மேற்குத் தொட ர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு ரங்கர் தீர்த் தம் என்ற நீர்வரத்து ஓடை உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் மங்கா புரத்தைச் சேர்ந்த ஜெய ராமன் என்பவருக்கு சொந்த மான எட்டு ஏக்கர் நிலமும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜெயகோபால் என்பவ ருக்கு20 ஏக்கர் நிலமும், ராகவன் என்பவருக்கு 20 ஏக்கர் நிலமும் உள்ளன. மூன்று பேரின் நிலங்களி லும் தென்னைமரம், மாமரம், கொய்யா மரம் உள்ளிட்ட மரங்களும் ஊடு பயிர் வகைகளும் உள்ளன. இரவு நேரத் தில் மரங்களை பாதுகாப்ப தற்காக மூவரின் தோட்டத்தி லும் பாதுகாவலுக்கு நபர்கள் உண்டு. கடந்த சில வாரங்களாக மலையிலி ருந்து பெண் யானை ஒன்று தன்னுடைய இரண்டு குட்டி யானைகளுடன் அடிவா ரத்திற்கு வந்து விளை நிலங்களில் புகுந்து தென்னை, மா, கொய்யா மரங்கள் உள்ளிட்ட பல மரங்களை துவம்சம் செய்து வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு ஜெய கோபால் மற்றும் ராகவன் காட்டிற்கு வந்த யானை கொய்யா மரங்கள் அனைத்தையும் துவம்சம் செய்துவிட்டது. இதுகுறித்து வனத் துறைக்கு முறையாக தகவல் தெரிவித்தும் நட வடிக்கை இல்லை என்று விவசாயிகள் தரப்பில் கூறப் படுகிறது. இந்நிலையில் புத னன்று இரவு ஜெயராமன் தோட்டத் திற்குள் புகுந்து தென்னை மரங்களை முழு மையாக சேதப்படுத்தி விட்டது. மரம் வளர்ந்து பலன் தரக்கூடிய நிலையில் மரங் களை யானை அழித்து விட்டது.இதுகுறித்து தகவல் அறிந்து நேரில் வனத்துறை அலுவலகத்தி ற்கு சென்று தகவல் தெரி வித்தும் அங்கிருந்து பணியாளர்கள் போதிய அளவிற்கு இல்லாததால் முழுமையாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி விட்டனர். மேலும் பெண் யானை தன் குட்டிகளுடன் தொ டர்ந்து விவசாயிகளின் நிலங் களை துவம்சம் செய்து வரு கிறது. இதனால் விவசாயிக ளின் வாழ்வாதாரம் கேள் விக்குறியாக உள்ளது.