கரூர், மே 17-
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்ச பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியிலிருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். கால்நடை மருத்துவ மனையை செயல்படும் மருத்துவ மனையாக மாவட்ட நிர்வாகம் மாற்ற வேண்டும்.
பஞ்சபட்டி அரசு ஆரம்பப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாக்கபட்ட சுத்திகரிக்கபட்ட குடி நீர் வழங்க வேண்டும். பஞ்ச பட்டி கடைவீதியில் பொதுக் கழிப்பிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் கரூர் மாவட்டத் தலைவர் கே.கந்தசாமி, ஒன்றிய துணைத் தலைவர் ஜி.ராஜா, ஒன்றியச் செயலாளர் ஏ.நாகராஜன், தங்கவேல், ஜி.தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.