தஞ்சாவூர், ஏப்.29-
தாம்பரம்- செங்கோட்டை அதி விரைவு ரயிலை அதிராம்பட்டினம், பேராவூரணி ரயில் நிலையங்களில் நிறுத்தி இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக் கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந் தம் ஆகியோர் தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘‘அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு பல்வேறு போராட்டங்கள் மற்றும் தொடர் கோரிக்கை விளைவாக ஜூன் முதல் தேதியிலிருந்து தாம்பரம்- செங் கோட்டை அதிவிரைவு ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் செகந்திராபாத்- இராமநாதபுரம் விரைவு ரயில் பேராவூரணி ரயில் நிலை யத்தில் நின்று செல்லவில்லை.
தாம்பரம்- செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிராம்பட்டினம் மற்றும் பேரா வூரணி ரயில் நிலையங்களில் நின்று செல்லவில்லை. எனவே, விரைவு ரயில்கள் அதிராம் பட்டினம் மற்றும் பேராவூரணி ரயில் நிலையங்களில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கோட்டை -தாம்பரம் அதிவிரைவு ரயில், இராமநாதபுரம்-செகந்திராபாத் விரைவு ரயில் போன்ற தொலை தூர ரயில்களில் சென்னைக்கு செல்ல முன்பதிவு மற்றும் முன்பதி வற்ற ரயில் பெட்டிகளில் இடம் கிடைப் பது சிரமமாக உள்ளது.
எனவே, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் மானாமதுரையில் இருந்து காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத் துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு தினசரி இரவு நேர மற்றும் பகல் நேர தினசரி விரைவு ரயில் களை தெற்கு ரயில்வே சார்பில் இயக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.