குடவாசல், ஏப்.1 - பேரளம் ரயில் நிலையத் தில் ராட்சத குழாய்கள் இறங்குவதால் குட்செட் தொழிலாளர்கள் ரயில் வேக னில் இருந்து நெல், அரிசி மூட்டைகளை வாகனங்க ளில் ஏற்றி-இறக்கி வைக்க முடிவதில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிப்பு, கடும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். இதையடுத்து சிஐடியு சங்கத் தின் சார்பாக வியாழக் கிழமை மாலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பேரளம் ரயில் நிலையத் தில் கடந்த மார்ச் 29 ஆம் தேதியிலிருந்து ஓஎன்ஜி சிக்கு சொந்தமான ராட்சத குழாய்கள் சுமார் 40-50 அடி நீளம், 3-4 அடி அகலம் உள்ள இரும்பு குழாய்கள் ரயில் வேகன் மூலம் வந்து, டாரஸ் லாரியில் ஏற்றப்பட்டு, மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி முகாமிற்கு கொண்டு செல்வ தாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக பேர ளம் குட்செட்டில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலா ளர்கள் வேலை இழந்து கடு மையாக பாதிக்கப்பட்டுள்ள னர். மேலும் திருவாரூர்-மயிலாடுதுறை-காரைக்கால் என முக்கிய சாலை போக்கு வரத்து வழித்தடமாக இந்த பகுதி உள்ளது. இதனால் பேரளம் கடைவீதியில் இருந்து தொடர்ந்து பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொது மக்கள் கடும் அவதிக்குள் ளாகின்றனர். இதை கண்டித்து, சிஐ டியு சார்பாக பேரளம் ரயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து, சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜெ. மனோகரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
போராட் டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முரு கையன், சிபிஎம் நன்னிலம் ஒன்றிய செயலாளர் கே.எம். லிங்கம் ஆகியோர் பேசினர். சாலை மறியல் நடை பெற்றதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நன்னி லம் காவல் துணை கண்கா ணிப்பாளர் இளங்கோவன் மற்றும் நன்னிலம் வட்டாட்சி யர் உள்ளிட்ட அரசு அதி காரிகள் சாலை மறியலில் ஈடு பட்ட தலைவர்களிடம பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் தலை வர்கள் பேசுகையில், எந்த வித கலந்தாய்வு கூட்டமும் இல்லாமல் திடீரென்று ராட்சத குழாய்களை இறக்கும் பணி யின் காரணமாக குட்செட் டில் பணிபுரியும் ஆயிரக் கணக்கான தொழிலா ளர்கள், லாரி உரிமையா ளர்கள் இரண்டு நாட்களாக பணி செய்ய முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கும் வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த நீடூர் கிராமத்தில் அமைக்கப்பட் டுள்ள ஓஎன்ஜிசி முகாமிற்கு செல்லும் ராட்சத குழாய் களை மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து கொண்டு செல்ல வேண்டும். அல்லது அருகே உள்ள கொல்லுமாங்குடி, சன்னா நல்லூர் ஆகிய ரயில் நிலை யங்களிலிருந்து பொதுமக்க ளுக்கு இடையூறு இல்லா மல் ராட்சத குழாய்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து வெள்ளிக் கிழமை மாலை நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத் தில் நடக்கும் பேச்சுவார்த்தை யில், உங்களின் கோரிக்கை களை தீர்த்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் உறுதி யளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. கஜேந்திரன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் டி.வீர பாண்டியன், தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் ஒன்றிய செய லாளர் எம்.ராமமூர்த்தி, சாலை போக்குவரத்து மாவட்ட து்ணை செயலா ளர் இப்ராஹிம் சேட் மற்றும் குட்செட்டில் பணிபுரியும் 200- க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள், லாரி உரிமையா ளர்கள், பொதுமக்கள் ஏராள மானோர் பங்கேற்றனர்.