திருச்சிராப்பள்ளி, ஜூன் 11 - திருச்சி பெல் நிறுவன (சிஐடியு) தொழிற்சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார வாயிற்கூட்டம் சனிக்கிழமை பெல் கிழக்கு கேட் அருகே நடை பெற்றது. கூட்டத்திற்கு பெல் சிஐடியு சங்க பொதுச் செயலாளர் பிரபு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது: சிஐடியுக்கு வாக்களியுங்கள் என்பது ஒரு தொழிற்சங்கத்திற்கு வாக்களி யுங்கள் என்ற அர்த்தத்தோடு முடிந்து விடுவதில்லை. இன்று நாம் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் இந்தியா வின் பொதுத்துறைகள் சூறையாடப்படு கின்றன. மிக மோசமாக அழிக்கப்படு கின்றன. இந்த அபாயகரமான நேரத்தில் பெல் தொழிற்சங்க தேர்தல் நடைபெறு கிறது. சுதந்திர போராட்ட காலத்திற்கு முன் பிருந்தே 100 ஆண்டுகளாக போராடி பெறப்பட்ட 44 தொழிலாளர்கள் சட்டங் களை, ஒன்றிய பாஜக அரசு நாடாளு மன்றத்தில் ஒன்றரை மணிநேரத்தில் இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். மும்பை யில் அம்பானி வீட்டு மாடியில் ஹெலி காப்டர் இறங்குவதற்காக, அவர் வீட்டிற்கு நேர் எதிரில் உள்ள பொதுத்துறை நிறு வனமான நேஷனல் பிலிம் டிவிஷனல் அலுவலகத்தை ஒரே மசோதாவில் கார்ப்பரேசனாக மாற்றி விட்டனர். இவர்களின் தேச பக்தியும், ஆன்மீக பக்தியும், தெய்வ பக்தியும் உண்மை கிடையாது. எல்லாம் கார்ப்பரேட் பக்தி. இங்கிருக்கிற கிழக்கு கேட் இந்த தொழிற்சாலையோடு சம்பந்தப் பட்டவர்களை தவிர, வேறு யாரும் உள்ளே வரக்கூடாது என்பது போல, எந்த அந்நிய நிறுவனத்தையும், எந்த கார்ப்பரேட் நிறுவனத்தையும் உள்ளே வரக்கூடாது என தடுத்து நிறுத்துகிற வாச லாக தொழிலாளர்கள் இருக்க வேண்டும். 44 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக சிஐடியு இருப்பது பெருமை. ஆனால் அதையும் கடந்து முதன்மை சங்கமாக மாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் சங்க துணைத் தலை வர்கள் பரமசிவம், அருணன், அமைப்பு செயலாளர் சந்துரு, பொருளாளர் இசக்கி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.