மயிலாடுதுறை, மே 23
மீனவர்களின் வாழ்வா தாரத்தைப் பாதுகாக்க வேண்டும். மின்சாரம், போக்குவரத்து ஊழியர்க ளின் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழு வதும் சிஐடியு நடைபயணம் மேற்கொண்டுள்ளது சிஐடியு நடைபயணக் குழு திங்களன்று மயிலாடு துறை மாவட்டம் வந்தடைந் தது.
மாநிலத் துணைத்தலை வரான கே.திருச்செல்வன், மாநிலச் செயலாளர் கே. ஜெயபால், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் ப.மாரி யப்பன், கடலூர் மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், தையல் சம்மேளன மாநிலத் தலைவர் மாலதி, நாகப்பட்டி னம் மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, அரியலூர் மாவட்டச் செயலாளர் துரை சாமி, மயிலாடுதுறை மாவட்டப் பொருளாளர் எம்.கலைச்செல்வன் உள்ளிட்ட பயணக்குழுவிற்கு கொள்ளி டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், சிஐ டியு இணைப்புச் சங்கங்கள் வரவேற்பு அளிக்கப்பட்டது.
புத்தூர், சீர்காழி, வைத்தீஸ் வரன்கோவில், குத்தாலம், சித்தர்காடு பயணித்த குழுவி னர் மயிலாடுதுறை நகரில் பயணத்தை நிறைவு செய்த னர். செவ்வாயன்று செம்ப னார்கோவில், ஆக்கூர், திருக்கடையூரில் பல்வேறு சங்கங்களின் சார்பில் வர வேற்பளிக்கப்பட்டது.
திருக் கடையூரில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.சிம்சன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ரவிச் சந்திரன், காபிரியேல் ஜி. வெண்ணிலா விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. ஸ்டாலின் உள்ளிட்டோர் வர வேற்றனர்.