districts

img

நாங்க ஒண்ணாத்தான் இருக்கோம் வேங்கை வயல் நூல் அறிமுக விழா

புதுக்கோட்டை, மே 7-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுக்கோட்டை மாவட்டச் செய லாளர் கவிவர்மன் எழுதிய வேங்கை வயல் நூல் அறிமுக விழா- அவரின் பல்வேறு சமூக செயல்பாடுக ளுக்கான பாராட்டு விழா, புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில், திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பால்.  நடத்தப்பட்டது.

   தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி யின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர், கராத்தே கண்ணையன் விழாவிற்கு தலைமை வகித்தார். திசைகள் அமைப்பின் பொருளா ளர் முகமது முபாரக் வரவேற்றார், அதன் தலைவர் மருத்துவர். தெட்சி ணாமூர்த்தி துவக்க உரை ஆற்றினர்.

   எழுத்தாளர் அண்டனூர் சுரா, தோழர் கவிவர்மனின் “நாங்க ஒண்ணாத்தான் இருக்கோம், “வேங்கை வயல்” நூலை அறிமுகம் செய்தார். ஆவுடையார்கோயில் துணை வட்டாட்சியர் .ஜபருல்லா,  கராத்தே பிரதர்ஸ் அமைப்பின் தலைவர் சுப்பிரமணியன், அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர்  விகாஸ் சரவணன், பீர் சேக், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலாளர் சலோமி, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் முபாரக் அலி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

   தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மணவாளன், கவிஞர் ரமா ராம நாதன், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் அலாவு தீன், சிஜடியு மாவட்டத் துணைத் தலைவர்  கர்ணா, பேராவூரணி மெய்ச்சுடர்.வெங்கடேசன், முனை வர் சண்முகப்பிரியா, சிபிஜஎம்எல் அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் மதிமுருகன், வாலிபர் சங்க பொறுப்பாளர் பாண்டி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டப் பொறுப்பாளர் கவிபாலா, திசைகள் பேச்சுப் பயிற்சித் திட்ட இயக்குநர் சற்குருநாதன், கவிஞர் கபார்கான், கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன்,கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன், கவிஞர் ரேவதி, கவிஞர் கவின் பாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

   கவிஞர் ஜீவி  சிறப்புரையாற்றி னார். நூலாசிரியர் கவிவர்மன் ஏற்புரையாற்றினார்.

   திசைகள் அமைப்பைப் சேர்ந்த சுரேஷ்ராஜ், புகழேந்தி, அண்ணாத் துரை, மாடசாமி, ரஜினிகாந்த், ரியாஸ் ஆகியோர் விழாவை ஒருங்கி ணைத்தனர். சிவராஜ செல்வன் நன்றியுரை ஆற்றினார்.