districts

img

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருச்சிராப்பள்ளி, ஜன.28- திருச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் இந்திரா  கணேசன் கலை மற்றும் அறி வியல் கல்லூரி, காவேரி மகளிர் கலை மற்றும் அறி வியல் கல்லூரி சார்பில் சனிக்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.  மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு கண்டோன் மெண்ட் நீதிமன்றம் வளாகம் வரை சென்று நிறைவடைந்தது.  இதில் மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வைத்தியநாதன், தேர்தல் தனி வட்டாட்சியர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.