பெரம்பலூர், ஏப்.7 - பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பெரம் பலூர் - துறையூர் சாலை வானொலித் திடலில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “9 லட்சத்து 75 ஆயிரம் கோடி தொழில் முத லீடுகள் மூலம் 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, 2 லட்சத்து 50 ஆயிரம் விவ சாயிகளுக்கு இலவச பம்ப் செட் மின்சாரம், மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை, மகளி ருக்கு இலவச பேருந்து பயணம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரு கிறார். இந்த தேர்தல் மூலம் ஜனநா யகத்தை காக்க, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் கே. என்.அருண்நேருவிற்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார். மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிர பாகரன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் உட்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.