பெரம்பலூர், ஜூன் 2-
பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் வட்டாட்சியர் அலு வலகங்களில் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற கிரெயின்ஸ் என்ற வலை தளத்தில் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க. கற்பகம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண் மை) பொ.ராணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்கு நர் இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.