districts

பருவம் தவறிய மழை: நிலக்கடலை, எள் பாதிப்பு

வேதாரண்யம், மே 9-

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள  மருதூர் வடக்கு, வடமழை, வாய்மேடு, கரியாப்பட்டினம், செட்டிப்புளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நெற் பயிர் சாகுபடிக்கு பிறகு நிலக் கடலை, எள், சணல் போன்ற பயிர்கள் 10,000 ஏக்கருக்கு மேல் சாகு படி செய்துள்ளனர்.

   இந்த நிலையில் பருவம் தவறி பெய்த மழையினால் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இதற்கு உரிய நிவா ரணம் வழங்க  வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், நாகப்பட்டி னம் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் தேவேந்திரன் தலைமை யில் வேளாண்மை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்  தனர்.  பாதிப்பு குறித்து விவசாயிகள் அளித்த தகவல்கள், நேரடி ஆய்  வின் விபரத்தை அரசுக்கு தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.