districts

மூளை பகுதியில் இருந்த கட்டி மூக்கின் வழியாக அகற்றம் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 26 - கரூர் மாவட்டம் வேப்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர்  ரஜினிகாந்த் (38). இவருக்கு கடந்த ஒரு வருடமாக தீராத  தலைவலி இருந்து வந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் தலைவலி குணமாகவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் ரஜினி காந்த் திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.  அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, அவரது மூளையின் பிட்யூட்டரி பகுதியில் கட்டி  இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து காது,  மூக்கு, தொண்டை மருத்துவர்கள் சதீஷ்குமார், அண்ணாமலை, கோகுல்ஆனந்த் மற்றும் மூளை நரம்பி யல் அறுவை சிகிச்சை மருத்துவர் முத்துராமன் உள்ளிட்ட  மருத்துவக் குழுவினர் அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யாமல் அதிநவீன கருவி மூலம் மூக்கு வழியாக கட்டியை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி ரஜினிகாந்திற்கு மூக்கின் வழியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மூளை பகுதியில் இருந்த  கட்டியை முழுவதுமாக அகற்றி திருச்சி அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

;