districts

திருச்சி பாய்லர் ஆலை குடியிருப்பு பகுதியில்  கால்நடைகளால் தாக்கப்படும் சிறுவர்கள்

திருச்சிராப்பள்ளி, டிச.17 - திருச்சி திருவெறும்பூர் ஒன்றியத் திற்குட்பட்ட பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் பாய்லர்  ஆலையில் ஊழியராக பணியாற்றி வரு கிறார். இவரது மகன் ஜெஸ்வந்த் (4)  பாய்லர் ஆலையில் உள்ள ஒரு தனி யார் பள்ளியில் எல்கேஜி படித்து வரு கிறார். வெள்ளியன்று ஜெஸ்வந்த் பாய்லர் ஆலை குடியிருப்பு காமராஜ் புரத்தில் விளையாடிக் கொண்டிருந் தார். அப்போது அங்கு வந்த காளை  மாடு ஒன்று ஜெஸ்வந்த்தை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை  அக்கம்பக்கத்தினர் மீட்டு பாய்லர் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி யில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த சிஐடியு  உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தி னர் மற்றும் பாய்லர் ஆலை ஊழியர் கள், இப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் மாடுகளை பிடிக்க பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இத னால் துவாக்குடி நகராட்சி, கூத்தப்பர்  பேரூராட்சி நிர்வாகங்களை கண்டித்து  திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை யில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 பின்னர் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், பெல் சிஐடியு சங்க செயலாளர் பரமசிவம், நிர்வாகி பிரபு, சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் அருணன், வாலிபர் சங்க மாவட்ட  தலைவர் லெனின், சிபிஎம் திருவெறும் பூர் ஒன்றிய செயலாளர் மல்லிகா, கவுன் சிலர் திவ்யா பங்கேற்றனர். இதில், துவாக்குடி நகராட்சி நிர்வா கம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து இன்னும் 2 நாட்களுக்குள் பாய்லர் ஆலை வளாகத்தில் உள்ள  மாடுகள் மற்றும் நாய்களை முழுமை யாக அப்புறப்படுத்துவோம் என உறுதி யளித்தனர்.  பாய்லர் ஆலை நிர்வாக மனிதவள  மேம்பாட்டு அதிகாரி மெல்வின் கூறுகை யில், “பாய்லர் ஆலை குடியிருப்பு வளாகம் மற்றும் ஆலைப் பகுதியில் உள்ள மாடுகள் முற்றிலுமாக அப்புறப் படுத்தப்படும். மேலும் ஆலைக்குள் மாடுகள் வராத அளவிற்கு அதற்கான தடுப்புகள் அமைக்கப்பட்டு பாய்லர் ஆலை ஊழியர்களின் குடும்பத்துக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும். மேலும்  காயமடைந்த சிறுவன் ஜெஸ்வந்த்து க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்” என்றார். பாய்லர் ஆலை குடியிருப்பு பகுதி யில் இதுவரை 3 சிறுவர்களை மாடுகள்  தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.