districts

img

திருச்சி 35-ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, பிப்.17- திருச்சி மாநகராட்சி 35-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.சுரேஷ் அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில் வியாழனன்று இருசக்கர பேரணியுடன் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டார்.  வாக்கு சேகரிப்பின் போது, திமுக அவைத்தலைவர் சாகுல் அமீது, வட்ட துணைச் செயலாளர் ரசாக், தமுமுக வட்ட  செயலாளர் முஜிபூர், இப்ராகிம்ஷா நிர்வாகி கள் சேட்டு, பயாஸ், மதிமுக வட்ட செய லாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜெயபால், முன்னாள் மாமன்ற உறுப்பி னர் கனல்கண்ணன், பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ராமர், கிளை செயலாளர்கள் எலிசபெத்ராணி, பத்மநாபன், செல்வராஜ், பகுதி குழு உறுப்பினர் சார்லஸ், சிஐடியு வினர், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சம்சுதீன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வாக்குகள் சேகரித்தனர்.