districts

திருச்சி விரைவு செய்திகள்

திட்டப் பணிகள் குறித்து மாவட்ட  கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

புதுக்கோட்டை, டிச.24-  புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்கு நர் எஸ்.கணேஷ், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டம், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்  தூய்மை பாரத இயக்கம், குடிநீர் வழங்கும் திட்டம், வருவாய்த்துறை யின் சார்பில் பட்டா வழங்குவது தொடர்பாகவும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம், சமூக நலத்துறை சார்பில் முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம், மருத்துவத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டப் பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடன், மாவட்ட கண்காணிப்பு அலு வலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ். கணேஷ் கலந்தாய்வு மேற்கொண்டார். மேலும், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை  அனைத்துத் துறை அலுவலர்களும் பொதுமக்களிடம் முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் என  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவ லர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா உள்ளிட்டோர் பங் கேற்றனர்.


சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:  குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை  

தஞ்சாவூர், டிச.24- தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் மேலக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (48). லாரி ஓட்டுநரான இவர் கடந்த 2017- ஆம்  ஆண்டு, 15 வயது சிறுமியை தனது வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல்  வன்கொடுமை செய்துள்ளார்.  இதைத்தொடர்ந்து அங்கிருந்து தப்பி வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமி  கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்து றையினர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜெய ராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ நீதிமன்றத்தில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. இதில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஜெயராஜூக்கு  ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு அளித்தார்.  மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் சசிரேகா ஆஜ ராகி வாதாடினார்.


துண்டு பிரசுரம் வழங்கல்

பொன்னமராவதி, டிச.24- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மறியல் போராட்ட  விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.  டிசம்பர் 29-ஆம் தேதி திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். போராட்டத்தை விளக்கி பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் துண்டு பிர சுரங்கள் வழங்கி பேசினர். அமைப்பின் கௌரவ தலைவர்  சிவஞானம் தலைமையில் மாவட்டத் தலைவர் லோகநாதன், பொன்னம ராவதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


நிதியுதவி வழங்கல்

தஞ்சாவூர், டிச.24-  தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற வசதியாக, நம்ம பள்ளித் திட்டத்தில் இணைந்து சைக்கிள் வாங்குவதற்கு உறுதுணையாக, துளிர் நண்பர்கள் - அறக்கட்டளை (1997-98)-ஆம் ஆண்டு முன்னாள்  மாணவர்கள் சார்பில் ரூ.10 ஆயிரம் தலைமை ஆசிரியர் முதல்வ னிடம் வழங்கப்பட்டது.  நிகழ்வில், அறக்கட்டளை தலைவர் ஆர்.நாகேந்திரகுமார், செயலாளர் சண்முகநாதன், பொரு ளாளர் வன்மீகநாதன் மற்றும் உறுப் பினர்கள் கலந்து கொண்டனர். உடற்பயிற்சி ஆசிரியர் சோலை நன்றி கூறினார். இப்பள்ளியின் 12 ஆம் வகுப்பு  மாணவர் இன்பன் கார்த்திக் மாநில அளவிலான சைக்கிள் போட்டி யில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ளார். போட்டியில் கலந்து கொள்ள சைக்கிள் வாங்க ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் செலவாகும். மேலும், மற்ற மாணவர்களும் தொ டர்ந்து பயிற்சி பெற வசதியாக இப் பள்ளிக்கு சைக்கிள் வாங்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.