districts

திருச்சி விரைவு செய்திகள்

பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி: பிப்.25, 26இல் வீரர்கள் தேர்வு

திருச்சிராப்பள்ளி, பிப்.6- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயது முதல்  24 வயது வரை இளம் வேக மற்றும் சுழற்பந்து பவு லர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதில் பங்கேற்க திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பவு லர்கள் தங்கள் பெயரை பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் ரேஷன் கார்டு நகலுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட வீரர்கள் தேர்வு திருச்சி சாராநாதன் பொறியியல் கல்லூரி யில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பிப்.25-ஆம் தேதியும்,  வேகப் பந்து வீச்சாளர்களு க்கு பிப்.26-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. மேலும் தகவல்களுக்கு 7010757073 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய் தெரி வித்துள்ளார்.


நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி,  பிப். 6 தட்டார்மடம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள வாலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகள் விஜயலட்சுமி (22), இவர் நாசரேத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சரியாக படிப்பு வராததால் கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்று கூறினாராம். ஆனால் அவரது தந்தை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த விஜயலட்சுமி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பவுல் லோஸ் மற்றும் காவல் துறையினர் நிகழ்ச்சியிடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கட்டிடப் பணியின் போது தவறி விழுந்து ஒருவர் பலி

தூத்துக்குடி, பிப்.6- தூத்துக்குடியில் கட்டிடப் பணியின் போது தவறி விழுந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார். கடலூர் மாவட்டம், குறிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சரவணன் (55), இவர் தூத்துக்குடி ஓம்சாந்தி நகரில் புதிதாக கட்டப்படும் வீட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். ஞாயிறன்று வேலை செய்து கொண்டி ருந்தபோது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார்.  இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தி லேயே  பரிதமாக இருந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.