தஞ்சாவூர், ஜூன் 5-
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஒடிசா ரயில் விபத்தில் உயர்நீத்த ரயில் பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, ஞாயிறன்று பட்டுக்கோட்டை ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது.
இதையொட்டி, முதலாவதாக இரண்டு நிமிடம் மௌனம் அனுசரிக்கப்பட்டது. பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பட்டுக் கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன், துணைத் தலைவர் கா.லட்சுமி காந்தன், செயலாளர் வ.விவேகானந்தம், துணை செய லாளர் மு.கலியபெருமாள், பொருளாளர் பி.சுந்தரராஜுலு, கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் நல சங்கங்களின் ஒருங்கிணைப் பாளர் காரைக்குடி பாலசுப்ரமணியன், ரயில் பயணிகள் சங்க உறுப்பினர்கள் வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள், ரயில் பயணி கள், குழந்தைகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.