districts

img

இயற்கை வளங்கள் கணக்கெடுப்பு: வனத்துறையினருக்கு பயிற்சி

தஞ்சாவூர், ஆக.19 -  திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் என்.சதீஷ்  உத்தரவின் பேரில், ஆகஸ்ட் 10,11, 17, 18 ஆகிய தேதி களில், வனக்கோட்டங்களில் பணிபுரியும் வனச்சரக அலு வலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் உயிரியி யலாளர்களுக்கு ட்ரோன் புகைப்பட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடல் புற்கள், அலையாத்தி காடுகள் மற்றும் அதை சார்ந்த இயற்கை வளங்களின் பரப்பளவை அளவிடும் முறை குறித்து உயர் தொழில் நுட்ப பயிற்சி, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வெளி வயல் ஓம்கார் பாக் வளைகுடா மையத்தில் விளக்க மளிக்கப்பட்டது.   ஓம்கார் நிறுவன இயக்குனர் டாக்டர் பாலாஜி இந்த பயிற்சியியை குழுவினருடன் விளக்கி கூறினார்.  இந்த பயிற்சியின் மூலம் வனத்துறையினர் டிரோன் மற்றும் ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் அலையாத்தி காடு களின் பரப்பளவு, மரக்கன்றுகள் நடவு செயப்பட்ட பகுதி கள், நடவேண்டிய பகுதிகள், காப்பு காடுகளின் பரப்பளவு மற்றும் கடல் புற்களின் பரப்பளவை அளவீடு செய்யும் முறை கள்  குறித்து நேரடியாக பயிற்சியின் மூலம் தெரிந்து கொண்டனர். இதில், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த வனத்துறையினர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.