districts

img

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குலசேகரம், டிச.17- கொரோனா பெருந் தொற்று காரணமாக அனு மதி மறுக்கப்பட்ட திற்பரப்பு  அருவியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளியன்று சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் உற்சாகத் துடன் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத் தில் முக்கடல் சங்கமம், சூரிய  உதயம், மறையும் காட்சி கள், திருவள்ளுவர் சிலை,  காந்தி மண்டபம், விவேகா னந்தர் மண்டபம், பத்மநாப புரம் அரண்மனை, சிதறால் சமண நினைவு சின்னங்கள், மாத்தூர் தொட்டிப் பாலம், உதயகிரிக் கோட்டை, உலக்கை அருவி, சொத்த விளை, முட்டம் கடற்கரை கள், கோயில்கள், தேவால யங்கள், மசூதிகள் என ஏராள மான சுற்றுலா தலங்கள் உள்ளன. ஆனாலும், உடலுக் கும் உள்ளத்துக்கும் உற்சா கமளிக்கும் இடமென்றால் திற்பரப்பு அருவிதான். இங்கு  சிறுவர்கள் விளையாட பூங்கா, அருவியின் மேல் பகுதியில் திற்பரப்பு தடுப்ப ணையில் படகு சவாரி என  ஏராளமான பொழுது போக்கு  அம்சங்கள் உள்ளன. இவை அனைத்தும் கொரோனா தடுப்புக்கான ஊரடங்கால் பார்வையாளர்கள் இல்லா மல் முடங்கின. படிப்படியாக மற்ற பகுதி களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், திற்பரப்பு அருவி யில் குளிப்பதற்கான அனு மதி மறுக்கப்பட்டு வந்தது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் வெள்ளியன்று (டிச.17) முதல் அருவியை கட்டுப்பா டுகளுடன் பொதுமக்கள் பயன்படுத்த மாவட்ட ஆட்சி யர் அனுமதியளித்து உத்த ரவு பிறப்பித்தார். இதனை யடுத்து வியாழனன்று அருவி யில் குளிப்பதற்கான ஏற்பா டுகள் செய்யப்பட்டது. அருவி பகுதியில் பாசி படிந்து  வழுக்கும் நிலையில் இருந்த  இடங்கள் மற்றும் சுற்றுப்பு றங்கள் தூய்மைப்படுத்தப் பட்டன. இதுகுறித்து திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் காலை 6 மணி  முதல் மாலை 6 மணி  வரை குளிக்க அனுமதிக்கப் படுவார்கள். கொரோனா விதி முறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அருவி யில் குளிக்கலாம். இங்குள்ள  கடைகள் அனைத்திலும் சானி டைசர்கள் வைத்தி ருக்க வேண்டும்.

சுற்றுலா பய ணிகள் முக கவசம் அணிந்தி ருக்க வேண்டும், அருவி நுழைவுக்கட்டணம் மற்றும் வாகன நிறுத்த கட்டணத்தை திற்பரப்பு பேரூராட்சி நிர்வா கம் வசூலிக்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் சனி, ஞாயிற்றுக் கிழ மைகளில் விடுமுறை என்ப தால் கூட்டம் அதிக அளவு  வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. குமரி மாவட் டம் மட்டுமின்றி வெளி  மாவட்டங்கள், வெளிமாநி லங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளும் ஐயப்ப  பக்தர்களுமாக ஏராளமா னோர் வருகை தருவார்கள்  என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதையடுத்து முன்னேற்பாடு பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப் பட்டிருப்பது சுற்றுலா பயணி களுக்கும், வியாபாரி களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.