districts

img

புரட்டாசி சனிக்கிழமைகளில் வைணவ கோவில்களுக்கு சுற்றுலா

கும்பகோணம், செப்.21 - ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள பக்தர்களை புரட்டாசி மாதம் சனிக்கிழமை  தோறும், வைணவத் திருக்கோயில் தரி சனம் செய்ய அழைத்துச் செல்வார்கள்  என தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தார். இதையொட்டி கும்பகோணம், சாரங்கபாணி கோவிலில் இருந்து  மூன்று வாகனங்களில் 35 பக்தர்களு டன் புறப்பட்ட வாகனங்களை மாநிலங் களவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம்,  கும்பகோணம் சட்டமன்ற உறுப் பினர் சாக்கோட்டை க.அன்பழகன், தமிழக அரசு கொறடா கோவி.செழி யன் ஆகியோர் கொடியசைத்து தொ டங்கி வைத்தனர்.  இதில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் சு.ப. தமிழழகன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் உள்ளூர் டி.கணேசன், கோவிலாச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.சுதாகர், மாமன்ற உறுப்பினர் குட்டி. தட்சிணா மூர்த்தி, அறநிலையத்துறை உதவி  ஆணையர் சாந்தா, செயல் அலுவ லர்கள் பங்கேற்றனர்.  இந்த வாகனங்கள் கும்பகோணம்  சாரங்கபாணி, சக்கரபாணி, திருச்சேறை  சாரநாத பெருமாள், உப்பிலியப்பன் கோயில் வெங்கடாஜலபதி மற்றும் நாச்சி யார்கோவில் சீனிவாச பெருமாள் கோயில்களுக்கு சென்று விட்டு, மீண்டும் கும்பகோணம் சாரங்கபாணிக் கோயிலில் நிறைவடைகிறது.  இதைத் தொடர்ந்து இந்த மாதம் மீதமுள்ள மூன்று சனிக்கிழமைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் வைணவத் திருக்கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என  கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.