கும்பகோணம், மே 14-
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மருத்துவ சான்று வழங்க சிறப்பு முகாம் செவ்வாய்க் கிழமை காலை 9 மணியளவில் கும்பகோணம் கே.எம். எஸ்.எஸ் சர்ச் வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடை யாள அட்டை வாங்காதவர்கள், யுடிஐடி கார்டு வாங்காத வர்கள், நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்கள் பங்கேற்று பயனடையலாம். உபகரணங்கள் தேவைப்படுவோர் மனுக் கள் அளிக்கலாம். முகாமிற்கு வருபவர்கள் தேசிய அடை யாள அட்டை வாங்கியிருந்தால் அசல் மற்றும் 2 நகல்கள், ஆதார் அட்டை அசல் மற்றும் 2 நகல்கள், ரேஷன் கார்டு அசல் மற்றும் 2 நகல்கள், 5 புகைப்படங்களுடன் வர வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.