அறந்தாங்கி, மே 17-
அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கட் ராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
மே 18- ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10:30 மணியளவில் அறந்தாங்கி மின் செயற்பொறியாளர் பகிர்மானக் கழக அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடை பெறும் கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.