districts

img

தியாகி ஷாஜகானின் குடும்பத்திற்கு ரூ.35 லட்சம் சிபிஎம் வழங்கியது

பாலக்காடு, அக்.25- தியாகி ஷாஜகானின் நினைவுகள் உயிர்ப்புடன் இருக்கும் சூழலில் ஆயிரக்க ணக்கான கட்சி தொண்டர்க ளின் உரத்த முழக்கங்க ளுக்கு மத்தியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஷாஜகானின் குடும்பத்தின ருக்கு புதுச்சேரி பகுதி கமிட்டி வசூலித்த 35 லட்சம் ரூபாயை வழங்கினார். பாலக்காடு சந்திராநகர் பார்வதி கல்யாணமண்டபம் முன் நடந்த வகுப்புவாத எதிர்ப்பு பேரணிக்கு பின் நடந்த நிதியளிப்பு பொ துக்கூட்டத்திற்கு சிபிஎம் புதுச்சேரி பகுதி செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார். அமைச்சர் எம்.பி.ராஜேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.கே.பாலன், மாவட்டச் செயலர் இ.என்.சுரேஷ்பாபு, மாநிலக் குழு உறுப்பினர்கள் சி.கே.ராஜேந்திரன், என்.என். கிருஷ்ணதாஸ் உள்ளிட் டோர் பேசினர். சுதந்திர தினத்தன்று கோட்டேக்காடு குன்னங் காட்டில் ஆர்எஸ்எஸ்-பாஜக கிரிமினல் கும்பல் ஷாஜகானை கொடூரமாக கொலை செய்தது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவியளிக்க கட்சி முடிவு செய்து குறுகிய காலத்துக் குள் வசூலித்து நிதி அளிக் கப்பட்டுள்ளது.