districts

img

மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், மே 12-

     கொள்ளிடம் ஆற்றில் முள்ளங்குடி யில் அமைய உள்ள மணல் குவாரியில் மாட்டு வண்டியில் மட்டும் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மணல் மாட்டு வண்டி தொழிற்சங்கத்தின் சார்பில் திருவிடைமருதூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு மாட்டு வண்டியு டன் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     போராட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர்  சி.ஜெயபால் தலைமை வகித்தார். முறைசாரா சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைத் தலைவர்கள் சா.ஜீவ பாரதி, ஜி.பக்கிரிசாமி, என்.பி.நாகேந்தி ரன், ஆர்.சேகர், மாட்டு வண்டி சங்க  நிர்வாகிகள், மாட்டு வண்டி தொழிலாளர் கள் கலந்து கொண்டனர்.

     டிப்பர், லாரி உள்ளிட்ட வாகனங்க ளில் மணல் எடுக்க அனுமதி வழங்க கூடாது. எஸ்.ஆர். நிறுவனத்திற்கு மணல் அள்ளும் உரிமை வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், மாட்டு வண்டியில் மணல் எடுக்கும் கட்டணத்தை குறைத்திட வேண்டும், மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மணல்  கொள்ளையை தடுத்திட வேண்டும்  என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.

  பின்னர் திருவிடைமருதூர் வட்டாட் சியர், நீர்வளத் துறை அதிகாரிகள், காவல் துறையினர் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நீர்வளத்  துறை மேல் அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டும், ஜூன் 1-க்குள் அதற்கான தீர்வு  தெரிவிக்கப்படும் என உறுதியளிக் கப்பட்டது. இதையடுத்து தற்காலிக மாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.  

  மேலும் கோரிக்கைகளை நிறை வேற்றாத பட்சத்தில் தஞ்சை மாவட்டத் தில் உள்ள மாட்டு வண்டி சிஐடியு தொழி லாளர்களை ஒன்று திரட்டி மாபெரும் குவாரியை முற்றுகையிடும் போராட் டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.