மயிலாடுதுறை டிச.13- மயிலாடுதுறை மாவட் டம் சீர்காழி வட்டம் புதுக் குப்பம் கிராமத்தில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் சார்பில் ரூ.60 லட்சம் செலவில் புதிதாக அமையவுள்ள வலைப் பின்னும் கூடத்திற்கு மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ‘‘பூம்புகார் சுற்றுலாத்த லத்தை உலக தரத்திற்கு இணையாக மறு சீரமைக்க தமிழக முதல்வர் ரூ.35 கோடி நிதியுதவி ஒதுக்கி உத்தர விட்டுள்ளார். மிக விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங் கப்படவுள்ளது. மிகப்பெரிய சுற்றுலா மையமாக பூம் புகார் சுற்றுலா மையம் உரு வாக்கப்படும்’’ என்றார்.