மன்னார்குடி, ஜூன் 1 - சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட சிறப்பு சட்டம் இயற்றிட கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார் சிலை எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி தலைமை வகித்தார். சிறப்புச் சட்டம் கோருவதன் அவசிய-அவசர சூழ்நிலைகளை விளக்கி முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கே.பிச்சைக்கண்ணு, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ரெ.சுமதி, மன்னார்குடி கோட்டூர் ஒன்றியச் செயலாளர்கள் கே.ஜெயபால், எல்.சண்முகவேலு, நீடாமங்கலம் நகர செயலாளர் வி. தமிழ்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.