பட்டுக்கோட்டை, ஜன.18- மத்தியப் பிரதேச மாநிலம் போபா லில், இந்தியா- இண்டர்நேஷனல் சயின்ஸ் பெஸ்டிவல்- 2022-23 நடை பெற உள்ளது. அதில் இளம் விஞ்ஞா னிகளுக்கான கருத்தரங்கில், பட்டுக் கோட்டை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியை எஸ்.சத்யா, பன்னாட்டு அளவில் கலந்து கொள்ள தேர்வாகி யுள்ளார். அதில், ‘‘FRONTIER IN SCIENCE RESEARCH’’ என்னும் தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். பன்னாட்டு மற்றும் இந்திய அறிவியல் விழாவில், (ஜனவரி 21-25 வரை) அகில இந்திய அறிவியலாளர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள இருக்கும் ஆசிரியை சத்யாவை, பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) கு.திரா விடச் செல்வன், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.