திருச்சிராப்பள்ளி, ஜூன் 12-
தமிழ்நாடு பட்டதாரி–முதுநிலைப்பட்டதாரி ஆசிரி யர் கழக மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சிராப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் சுந்தர மூர்த்தி, மாநில சிறப்புத் தலைவர் சுப்பிரமணியன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசுப் பணியில் சேர்ந்தவர் களுக்கு புதியஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கற்றல்-கற்பித்தல் சிறப்புற 2011–12-ஆம் கல்வி ஆண்டில் வழங்கியதை போல் 6 -8 வகுப்புகளுக்கு மூன்று ஆசிரியர் பணியிடங்கள், 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு ஒரு பாடத்திற்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் என்ற அளவில் ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்கள் என குறைந்தது எட்டு பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை உருவாக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயத்தில் உயர்நிலை பள்ளிகளில் உள்ள வாறே, அரசு மேல்நிலை பள்ளிகளிலும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.