districts

மீன் வளர்ப்பை ஊக்குவிக்க மானியம் வழங்கும் திட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.11 - திருச்சி மாவட்டத்தில் மீன் வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  பிரதம மந்திரி மத்திய மீன்வள மேம் பாட்டு திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர  அளவிலான அலங்கார மீன் வளர்க்கும் திட்டம், புதிய நன்னீர் மீன்குஞ்சு பொறிப்ப கம் அமைக்கும் திட்டம், சிறிய அளவிலான  பயோபிளாக் குளங்கள் அமைக்கும் திட்டங்க ளின் கீழ் ஒரு அலகிற்கு ஆகும் செலவி னத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீதம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 60  சதவீதம் மானியமாக வழங்கப்படும். மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறு வதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரி விக்கப்படுகிறது. எனவே மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப் பிக்க விரும்பும் பயனாளிகள் திருச்சி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி  இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு  கொண்டு விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவ ணங்களுடன் 30.11.2022-க்குள் உதவி இயக்கு நர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், எண்.4, காயிதே மில்லத் தெரு,  காஜா நகர், மன்னார்புரம், திருச்சி-620 020 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.  மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.0431- 2421173 என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்  தெரிவித்துள்ளார்.