districts

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி

திருச்சிராப்பள்ளி, டிச.14- திருச்சி திருவெறும்பூர் ஜெய் நகர் பகுதி யை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி இந்துமீனா (28). இவர் வெளிநாடு செல்ல ஆர்வமாக இருந்தார்.  இதனையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞர் தனது நண்பர்கள் வெளிநாட்டு வேலைக்கு ஆட் களை அனுப்பி வருவதாக தெரிவித்தார். பின்னர் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த கிஷோர், திருச்சி கே.கே. நகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் ஆகிய 3 பேரை இந்து  மீனாவுக்கு அறிமுகம் செய்து வைத்து, மூவ ரும் அயர்லாந்தில் பல லட்சம் சம்பளத் துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறி அவரிடம் ரூ.19 லட்சம் பெற்றனர்.  ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் வெளிநாட்டு வேலையை பெற்றுத் தர வில்லை. அது மட்டுமல்லாமல் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தனர்.  இதனால் பாதிக்கப்பட்ட இந்துமீனா திருவெறும்பூர் காவல்துறையினரிடம் புகார் செய்தார். புகாரின்பேரில், வினோத், கிஷோர், பிரபாகரன் ஆகிய 3 பேர் மீதும்  மோசடி வழக்கு பதிவு செய்து காவல்துறை யினர் விசாரணை நடத்தினர்.  இதில், மூவரும் பாண்டிச்சேரியில் நடந்த மோசடி வழக்கில் சிக்கி, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் பலரையும் ஏமாற்றி லட்சக்  கணக்கில் பணம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.