திருவாரூர், ஜூன் 7-
திருவாரூர் மாவட்டத் தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிலையில், புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சி யர் தி.சாருஸ்ரீ குத்துவிளக் கேற்றினார். நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வ ராஜ், திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், திருவாரூர் நகரமன்றத் தலைவர் புவன பிரியா செந்தில், இணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ஹேமசந்த்காந்தி, திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் நகராட்சி, கொடிக்கால்பாளையம் நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் மன்னார்குடி நக ராட்சி குட்டகரை நகர்ப்புற நலவாழ்வு மையம் என திரு வாரூர் மாவட்டத்தில் 2 நகர்ப் புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள் ளன.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 25 இடங்களில் தலா ரூ25லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நலவாழ்வு மையங் கள் கட்டப்பட்டன. இந்த மையங்களை தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டான்லின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் 4-ல் உள்ள கிராப் பட்டி நலவாழ்வு மையம் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிர தீப்குமார், திருநாவுகரசு எம்பி கலந்து கொண்டனர்.
இதேபோல், திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதி யில் கட்டப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மைய திறப்பு நிகழ்ச்சியில் மாநகராட்சி 35-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சி லர் சுரேஷ் மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர். இதில் மருத்துவர், அரசு அதிகாரிகள், சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் விஸ்வ நாதன், ரூபன், கண்ணன், கிருஷ்ணன், சோலைராஜன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.