districts

img

அரை நூற்றாண்டாக வாடகையில் இயங்கும் திருக்கடையூர் நூலகம் புதிய கட்டடம் எப்போது கட்டப்படும்: வாசகர்கள் கேள்வி

மயிலாடுதுறை, நவ.9 - மயிலாடுதுறை மாவட் டம் திருக்கடையூரில் 52 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்திலேயே இட நெருக்  கடியுடன் இயங்கி வரும் நூலகத்திற்கு புதிய கட்டிடம் எப்போது கட்டப்படும் என  வாசகர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர்.       திருக்கடையூரில் பொது நூலகத் துறையின் கீழ் கிளை  நூலகம் 1970-ல் துவங்கப் பட்டு தொடர்ந்து செயல்  பட்டு வருகிறது. வாடகை கட்டிடத்திலேயே அரை நூற்றாண்டாக செயல்படும் இந்த நூலகத்தை திருக் கடையூர், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாள்நல்லூர், கண்ணங்குடி, இரவணி யன்கோட்டகம், நட்சத்திர மாலை, வளையசோழகன், சீதைசிந்தாமணி, அபிஷேக கட்டளை, பிச்சைக்கட்டளை உள்ளிட்ட சுற்றுவட்டார கிரா மங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன் படுத்தி வருகின்றனர். மேலும் 2,176 பேர் வாசக  உறுப்பினர்களாக உள்ள னர். வரலாறு, நாவல், இலக்  கியம், கவிதை, கட்டுரை, ஆன்மீகம், அரசியல், சட் டம், சமையல், அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 29,847 புத்தகங்கள் உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவை யான புத்தகங்களும்  இருப்ப தால் மாணவர்கள்  அதிகள வில் வந்து படிக்கின்றனர்.  இதன் அருகிலேயே அமிர்தகடேஸ்வரர் கோவில்  உள்ளதால் அங்கு வரும் ஏரா ளமான பக்தர்களும் தினசரி நாளிதழ்களையும், பல்வேறு நூல்களையும் படித்து செல்கின்றனர். போதுமான இடவசதியின்றி நூலகம் உள்ளதால் பெரும்பாலான புத்தகங்கள் மழையில் நனைந்தும், பூச்சிகள் அரித்தும் சேதமடைவதாக கூறப்படுகிறது.  நூலகத்தின் இடநெருக்  கடியை உணர்ந்த திருக்கடை யூர் ஊராட்சி நிர்வாகம் நூல கத்திற்கென்று தனி இடத்தை 2015 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்தது. ஆனால் அந்த  இடத்தை உரிய ஆய்வு செய்து நூலகம் பெயரில்  பத்திரப் பதிவும் செய்யப் பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொட ர்ந்து அலட்சியம் காட்டுவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  நூலகம் துவங்கி அரை நூற்றாண்டு ஆகியும், தனி இடம் ஒதுக்கீடு செய்து 17 ஆண்டாகியும்  இன்றும் பாழ டைந்த பழைய கட்டிடத்தில் வாடகையில் இயங்கி வரும் நூலகம் எப்போதுதான் சொந்த கட்டிடத்தில் இயங் கும்? என வாசகர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.