districts

img

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைக்கு ரோப்கார் வசதி கைவிடப்பட்டது?

திருச்சிராப்பள்ளி, ஏப்.6- திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டைக்கு ரேப்கார் வசதி செய்து கொடுக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தாயுமானசுவாமி கோவில், உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இவை தவிர நாட்டின் பல்வேறு மாநிலங்க ளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணி கள் வந்து செல்கின்றனர். பக்தர்க ளும் சுற்றுலாப் பயணிகளும் உச்சி பிள்ளையார் கோவிலுக்குச் செல்ல 437 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகள் செங்குத்தாதாக இருப் பதால், வயதானவர்கள் படிகளில் ஏற சிரமப்படுகின்றனர். இந்தச் சிர மத்தை குறைக்க இந்து சமய அற நிலையத்துறை மலைக்கோட் டைக்கு ரோப் கார் வசதியை ஏற்படுத்த பல முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. 1970-ஆம் ஆண்டு முதல் முயற்சி மேற்கொள் ளப்பட்டு வந்தது. ஆனால் ரோப் காரை இயக்க போதிய இடவசதி இல்லாததால் திட்டத்தைச் செயல் படுத்த முடியவில்லை. திமுக அரசு, 2021-ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மீண்டும் இந்தத் திட்டத்திற்கு புத்துயிர் அளித்தது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு 2021-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி திருச்சி ராப்பள்ளிக்கு வந்திருந்தபோது  தமிழகத்தில் சோழிங்கநல்லூர் நரசிம்மர் கோவில், திருச்செங் கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருநீர்மலை கோவில், மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், திருத்தணி முருகன் கோவில் ஆகிய ஐந்து கோவில் களில் ‘ரோப் கார்’ அமைப்பதற்கு முதலமைச்சர் ஆய்வு பணி மேற் கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரோப்கார் வசதி ஏற்படுத்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது எனத் தெரி வித்திருந்தார். சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய குழுவும் அமைக் கப்பட்டது. நிபுணர்கள் குழு, மலைப் பாதையை ஆய்வு செய்தது. ரோப்  காரை இயக்குவதற்கான நிலை யங்கள், பயணச்சீட்டு வழங்கும் இடங்கள், மக்கள் காத்திருப்ப தற்கான இடம் ஆகியவற்றை நிர்மா ணிக்க போதி இடவசதி இல்லாத தால் திட்டத்தைக் கைவிட இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளதாகவும் ரேப்கார் வசதியை ஏற்படுத்த மலையின் தன்மையும் ஏற்றதாக இல்லை தகவலறிந்த வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
கும்பகோணம்
கும்பகோணம் சுவாமிமலை சுவாமி நாதசுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோ கன் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலைக்கோ விலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்ய லிப்ட் வசதி அமைப்ப தற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கோவில்  சுற்றுப்புறங்களில் உள்ள தேவை யற்ற செங்கல் கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டார். முன்ன தாக அவரைக் கோவில் செயல் அலுவலர் உமாதேவி, இணை ஆணையர் மோகனசுந்தரம், கும்பகோணம் உதவி ஆணையர் சாந்தா, மற்றும் கோவில் பணியா ளர்கள் வரவேற்றனர்.