districts

img

நவீனத் தொழில்நுட்ப வசதிகளின் மூலம் பிரான்சில் தமிழ்ப் படிப்புகள் அறிமுகம்

தஞ்சாவூர், ஜூன் 10-  

      ஐரோப்பியக் கண்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் பிரான்ஸ் முக்கிய நாடாகும். லட்சக்கணக்கில்  தமிழர்கள் வாழும் இந்நாட்டில் தமிழ்க்கல்வியை மேம்படுத்தும் வகையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர்மையம் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

    பிரான்சில் 25 ஆண்டுகளாகத் தமிழ் வகுப்புகளை நடத்தி வரும், தமிழ்ச்சோலை அமைப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் அங்குள்ள தமிழர்கள் இணையவழி வகுப்புகள் மூலமாக நேரடிக் கல்வியைப் பெற வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

     தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, புரிந்துணர்வு ஒப்பந்தக் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், தலைமை வகித்த துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன், தமிழ்ச்சோலை அமைப்பின் கல்வித்திட்ட அலுவலர் சிவஞானம் தனராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.  

   பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் பங்கேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஏற்பாடுகளை தமிழ் வளர் மைய இயக்குநர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் செய்திருந்தார்.