சிவகாசி, மே 3-
சிவகாசியில் உடற்பயிற்சிக்கூட உரிமையாளர்களிடம் பரிசோதனை அதிகாரிகள் என மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்த னர்.
மதுரை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சாமி ராஜ் (30), தினமணி நகரை சேர்ந்தவர் மார்க்கரெட் இன்சென்ட்ஜெனிபர் (28), வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ் (26). இவர்கள் மூவரும் கடந்த சில மாதங்க ளுக்கு முன்னால், சிவகாசியில் உள்ள தனியார் உடற் பயிற்சிக் கூடங்களுக்குச் சென்றுள்ளர். பின்பு, தங்களை உடற்பயிற்சி கூடங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள் என கூறியுள்ளனர்.
இதையடுத்து, கூடங்கள் நடத்த உரிமம் உள்ளதா? பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் உள்ளதா? பயிற்சி எடுக்க வருவோருக்கு சத்தான உணவுகள் வழங்கப்படு கிறதா? நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படு கிறதா? என்பது போன்ற கேள்விக் கணைகளை தொடுத் துள்ளனர்.
இதனால், உடற்பயிற்சிகூட உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பின்பு, அபராதம் விதிக்கப் போவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணத்தைப் சுருட்டியுள்ளனர். இந்தநிலையில், மூவரும் போலியான அதிகாரிகள் என தெரியவந்தது.
இதையடுத்து, மீண்டும் சிவகாசிக்கு வந்து சிவமுரு கன் என்பவரின் உடற்பயிற்சி கூடத்தில் ஆய்வு செய்துள்ள னர். அப்போது ஏற்கனவே பணம் கொடுத்து ஏமாந்த வர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த சிவகாசி கிழக்கு காவல்துறையினர் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.