districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாடுகள்

திருத்துறைப்பூண்டி தெற்கு  ஒன்றியச் செயலாளராக  காரல் மார்க்ஸ் தேர்வு

திருவாரூர், அக்.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் திருவாரூர் மாவட் டம், திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியத்தின் 24 ஆவது மாநாடு மங்கை மஹாலில் பி.என்.தங்கராஜ் நினைவரங்கத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு ஆர்.வேதையன், எஸ்.பவானி, என்.வீராசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக மண்ணை சாலை யில் உள்ள மக்கள் தலை வர் தோழர் பி.சீனிவாச ராவ் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், தியாகிகள் பெய ரால் மாநாட்டு கொடிமரம், கொடி, கயிறு மற்றும் தியா கிகள் நினைவுச் சுடருடன் ஊர்வலமாக புறப்பட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்ட கொடி மேடையில் மாவட்டக்  குழு உறுப்பினர் டி.சுப்பிர மணியன் மாநாடு செங் கொடியை ஏற்றினார். கட்சியின் மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி.நாகராஜன்  துவக்க உரையாற்றினார். மாநாட்டில் 15 பேர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, புதிய ஒன்றி யச் செயலாளராக டி.வி. காரல்மார்க்ஸ் தேர்ந்தெடுக் கப்பட்டார். மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி நிறை வுரையாற்றினார். பயிர் காப்பீட்டு செய்து  காப்பீடு தொகை வழங்கா மல், விடுபட்ட அனைத்து கிராமங்களிலும் உடனே பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

சிபிஎம் குளித்தலை  ஒன்றியச் செயலாளராக  இரா.முத்துச்செல்வன் தேர்வு

கரூர், அக்.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் குளித்தலை ஒன்றிய 7 ஆவது மாநாடு (சீத்தாராம் யெச்சூரி, சங்க ரய்யா நினைவரங்கம்) சத்ய  சாய் சாந்தா திருமண மஹா லில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு சிலும்பாயி தலைமை வகித்தார். ஒன்றி யக் குழு உறுப்பினர் பிரபா கர் வரவேற்றார். கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு மாநாட்டை துவக்கி வைத்துப் பேசி னார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.  மாநாட்டில் 11 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியச் செயலாளராக இரா.முத்துச்செல்வன் தேர்வு செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், இனுங் கூர் வைரபுரி மக்களின்  அடிப்படை கோரிக்கை களை வலியுறுத்தி குளித் தலை ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகம் முன்பு  அக்.22 அன்று ஆர்ப்பாட்டம்  நடத்துவது. அக்.24 அன்று  மாலை 5 மணிக்கு குளித் தலை சார் ஆட்சியரின் மக்கள் விரோத போக்கை கண்டித்து குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு மாபெரும் கண் டன ஆர்ப்பாட்டம்  நடத்து வது. குளித்தலை காவிரி ஆற்று தென்கரை மருதூர்  முதல் வடகரை உமையாள் புரம் வரை கதவணை கட்டும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிபிஎம் பூதலூர் வடக்கு  ஒன்றியச் செயலாளராக டி.ஸ்ரீதர் தேர்வு

தஞ்சாவூர், அக்.20 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட் டம், பூதலூர் வடக்கு ஒன்றிய  15 ஆவது மாநாடு சனிக் கிழமை திருக்காட்டுப்பள்ளி கரிகாலன் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.  மாநாட்டில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம்,  கே.பக்கிரிசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறி ஞர் வெ.ஜீவகுமார் ஆகி யோர் பங்கேற்றனர். புதிய  ஒன்றியச் செயலாளராக டி. ஸ்ரீதர் தேர்வு செய்யப்பட்டார். மேலும், 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது.  திருக்காட்டுப்பள்ளி புதுப்பாலத்திலிருந்து கூட நாணல் வரை புறவழிச் சாலை அமைத்திட வேண் டும். திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் மூன்று மருத்துவர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். பிணவறையை உடனடியாக கட்டித் தர வேண்டும். விவசாய விளை பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை  நிர்ணயிக்க வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமி நாதன் பரிந்துரையை சட்ட மாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுகை போக்குவரத்து  இடைக்கமிட்டி செயலாளராக இரா.மணிமாறன் தேர்வு

புதுக்கோட்டை, அக்.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை போக்குவரத்து இடைக் கமிட்டி செயலாளராக இரா. மணிமாறன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை போக்குவரத்து இடைக் கமிட்டி 24 ஆவது மாநாடு புதுக்கோட்டையில் சீத்தா ராம் யெச்சூரி நினைவ ரங்கில் ஞாயிறன்று நடை பெற்றது. மாநாட்டுக்கு கே. கார்த்திக்கேயன், பி.செந்தில் நாதன், எஸ்.சாமியய்யா ஆகியோர் தலைமை வகித்த னர். மாநாட்டு கொடியை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஏற்றி வைத்தார்.  மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்ட செயற்குழு  உறுப்பினர் துரை.நாரா யணன் உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.முகமதலி ஜின்னா, அ.மணவாளன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் 9 பேர் கொண்ட இடைக்குழுவும், அதன் செயலாளராக இரா. மணிமாறனும் தேர்வு செய் யப்பட்டார். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ஸ்ரீதர் உரையாற்றினார்.