திருச்சிராப்பள்ளி, ஏப்.7- திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ் தியம்பள்ளிக்கும், ஏப்ரல் 10-ம் தேதி முதல் வாரத்தில் ஐந்து நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு தவிர) இரண்டு டெமு (டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகலரயில்பாதை சேவையை பிரதமர் மோடி ஏப்ரல் 8-ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் சென்னையில் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம் பள்ளி முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பி ரஸ் ரயில் திருத்துறைப்பூண்டியில் இருந்து காலை 6.45 மணிக்குப் புறப்பட்டு 7.40 மணிக்கு அகஸ்தியம்பள்ளியை அடையும் அகஸ்தியம் பள்ளியில் இருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்டு 8.50 மணிக்கு திருத்துறைப் பூண்டியை சென்றடையும். திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் ரயில் திருத்துறைப்பூண்டியில் இருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு இருந்தது. மாலை 4.25 மணிக்கு அகஸ்தியம்பள்ளி சென்றடை யும். மறுமார்க்கத்தில் அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி முன்பதிவு செய்யப் படாத விரைவு ரயில் அகஸ்தியம்பள்ளியில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு திருத்துறைப்பூண்டி சென்றடையும். இந்த ரயில்கள் கரியாபட்டி னம், குருவாபுலம், நெய்விளக்கு, தோப்புத் துறை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும்.