districts

திருமக்கோட்டை எரிவாயு சுழலி மின் நிலையத்தை தொடர்ந்து இயக்க கோரிக்கை

மன்னார்குடி, ஆக.13 -

     திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை எரிவாயு சுழலி மின்நிலையத்தை தொடர்ந்து  இயக்க வேண்டும் என மின் வாரிய பொறி யாளர்கள் சங்கம் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளது.

    தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம் திருவாரூர் செயற்குழு கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத் திற்கு கிளைத் தலைவர் ச.இராஜேந்திரன் தலைமை வகித்தார். திருவாரூர் கிளைச் செய லாளரும், தஞ்சை மண்டல செயலாளரு மான முனைவர் சா.சம்பத் சிறப்புரையாற்றி னார்.

     இதுகுறித்து சங்கத்தின் தீர்மானத்தில், “110 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி திறன்  கொண்டு சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த  மின் நிலையம், மன்னார்குடி மற்றும் அதனை  சுற்றியுள்ள பகுதிகளின் மின் தேவையை பெரும்பாலும் பூர்த்தி செய்தது. மேலும், குறைந்த மின் அழுத்த பிரச்சனையும் சீரானது.  

    இயற்கை எரிவாயு விலை உயர்வை காரணம் காட்டி, இம்மாதம் முதல் தேதியி லிருந்து, எரிவாயுவை கொள்முதல் செய்யா மல் மின் நிலையம் இயங்காமல் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மின் நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வணிகம் மற்றும் பொருளாதாரமும், பணி புரியும் பொறியாளர்கள் மற்றும் பணியா ளர்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகி யிருக்கிறது. எனவே இதில் உடனடியாக நட வடிக்கை எடுத்து திருமக்கோட்டை எரிவாயு  சுழலி மின் நிலையத்தை தொடர்ந்து இயக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.