districts

img

திருக்கடையூர் - கண்ணங்குடி - கிள்ளியூர் இணைப்பு சாலை மேம்பாட்டு பணிகள்

மயிலாடுதுறை,  ஜன.23 - மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட திருக்கடையூர் -கண் ணங்குடி - கிள்ளியூர் கிராமங் களை இணைக்கும் நெடுஞ் சாலைத் துறையின் கீழ் உள்ள இச்சாலை ரூ.48 லட்சம் மதிப்பீட்டின் கீழ் மேம்படுத் தப்பட உள்ளது. இதுகுறித்து பூம்புகார்  சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி திட்டம் சாரா பணிகளின் கீழ் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோன்று செம்பனார்கோவில் -  நல்லாடை சாலை மற்றும்  தரங்கம்பாடி - மங்கை நல்லூர் - ஆடுதுறை ஆகிய சாலைகளிலும் மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இப்பணி கள் அனைத்தும் மார்ச் மாதத் திற்குள் முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

;