மயிலாடுதுறை, மே 5- மகாகவி பாரதியாரின் துணை வியார் செல்லம்மாவின் நினை வினை போற்றும் வகையில் திரு வள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் கசுவம் கிராமத்தில் இயங்கிவரும் சேவாலயா அறக்கட்டளை செல் லம்மா பாரதி பிறந்த ஊரான கடை யத்தில் நிறுவப்படவுள்ள பாரதி தன் மனைவியின் தோள்மீது கைபோட்டு நிற்கும் சிலை ரத யாத்திரை தில்லை யாடி தியாகி வள்ளியம்மை நினைவு மணிமண்டபம் வந்தடைந்தது. மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு மணிமண்டபம் வந்த டைந்த செல்லம்மா பாரதி ரத யாத்திரைக்கு உற்சாக வரவேற்ப ளித்தது. தில்லையாடி ஊராட்சி தலைவர் ரெங்கராஜ் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி யில், சேவாலயா பள்ளி தலைமை யாசிரியை நிர்மலா, தியாகி வள்ளி யம்மை நினைவு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கோபால கிருஷ்ணன், ஊராட்சி துணைத் தலைவர் அனுசுயா சஞ்சய்காந்தி, தியாகி வள்ளியம்மை மணிமண்டப காப்பாளர் ஹைதர் அலிமற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செல்லம்மா பாரதி சிலைக ளுக்கு மாலை அணிவித்து மரி யாதை செய்தனர். பின்னர் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசுகளை வழங்கினர்.