மயிலாடுதுறை, செப்.9 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், காட்டுச்சேரி அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குறுவட்ட அளவி லான விளையாட்டுப் போட்டியில், தரங்கம் பாடி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். குழு மற்றும் தடகளப் போட்டிகளில் பங்கேற்ற இப்பள்ளி மொத்தம் 213 புள்ளி களுடன் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள் ளது. மேலும் கீழோர் பிரிவில் எஸ்.தமிழரசி யும், மேலோர் பிரிவில் ஏ.அபிநயாவும் சாம்பி யன் பட்டம் வென்றுள்ளனர். பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், வீராங் கனைகளையும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.