districts

உளுந்து விதைகள் போதுமான அளவு இருப்பு உள்ளது வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

தஞ்சாவூர், மே 5-  

   தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை வட்டார வேளாண்மை விரி வாக்க மையத்தில் உளுந்து விதைகள்  போதுமான அளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளது என வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.  

   இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘பட்டுக்கோட்டை வட்டாரத் தில் கடந்த 4 நாட்களாக பெய்த மழை யால் சித்திரை பட்டத்தில் ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிருக்கு அதிக மகசூல் பெற உகந்தது. இந்த மழையினை பயன்படுத்தி குறுகிய கால பயிரான உளுந்து சாகுபடி செய்ய தயாராக உள்ள விவசாயிகளுக்கு அதற்கு தேவை யான வம்பன் 8 ரக உளுந்து விதைகள்  பட்டுக்கோட்டை வட்டார வேளாண் விரிவாக்கம் மையத்தில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

   தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயினால் பாதிக்கப்பட்ட மரங்களில் உள்ள கரி பூட்டைகள் மழை  நீரினால் சுத்தம் செய்யப்பட்டு தென்னை  மரங்கள் புத்துயிர் பெற உதவும்.  

   இந்த மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும் என வும், கோடை உழவு செய்வதால் நீரை  நிலத்தில் தக்க வைக்கும், மண்ணில் உள்ள கூட்டு புழுக்கள் அழிக்கப்பட்டு பூச்சித் தொல்லையை குறைக்கும்.  

  கோடை உழவு செய்யப்படாத வயல்களில் மேல் மண் அரிமானம் ஏற்படுவதோடு மண்ணிலுள்ள ஊட்டங் களும் விரயமாகும். கோடை உழவில்  மண்ணரிப்பு தடுக்கப்பட்டு வயல்களி லேயே மழைநீர் சேகரிக்கப்படுவதால் நிலப்பரப்பின் கீழ் ஈரப்பதம் காக்கப்படு வதால், பூச்சிகள் மற்றும் பூஞ்சான்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

   கோடையில் உழுவதால் மண்ணுக் கடியில் காணப்படும் கூட்டுப்புழுக்கள் மேற்பரப்பில் தள்ளப்பட்டு பறவை களுக்கு இரையாக்கப்பட்டும், வெயிலி லும் கொல்லப்படுகிறது. மேலும் களை களின் வேர்ப்பகுதி களையப்பட்டு முளைப்பு திறன் வெகுவாக குறைக்கப் படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த  காலநிலையை பயன்படுத்தி விவசாய நிலத்தை வளமான நிலமாக மேம் படுத்தி கொள்ள வேண்டும்’’ எனக் கூறப் பட்டுள்ளது.