districts

img

பாஜக சின்னத்தை அழிக்க தயங்கும் அதிகாரிகள்

ஒட்டன்சத்திரம்,  மார்ச் 17-  ஒட்டன்சத்திரத்தில் தேர்தல் விதியை மீறி ஒன்றிய அரசுக்கு சொந்தமான பாலத் தின் சுவற்றில் வரையப்பட்ட பாஜக சின்னத்தை அழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நகரங்களில் உள்ள அரசுக்கு சொந்த மான பாலங்கள் உள்ளிட்ட  சுவர்களில் தேர்தல் சின் னங்களை வரையக்கூடாது என்றும், கட்சி விளம்பரங் கள், சின்னங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர்கள் மற்றும்  தட்டி போர்டுகள் ஆகியவற்றை வைக்கக் கூடாது என்றும் மீறி சின்னம் வரைந்தாலோ, பேனர்கள் வைத்  தாலோ அவற்றை அந்த அர சியல் கட்சியின் செலவிலேயே அகற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், திண்டுக்  கல் மாவட்டம் ஒட்டன்சத்தி ரத்தில் தாராபுரம் சாலையில் கமலாபுரம் முதல் பொள்ளாட்சி வரை செல்லும் நான்கு வழிச்சாலையின் மேம் பாலத்தின் சுவற்றில் பாஜகவின் சின்னமான தாமரை சின்னம் பல இடங்களில் வரையப்பட்டுள்ளது. ஆனால், ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் யாரும் இதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். பாஜக தேர்தல் விதியை  மீறி ஒன்றிய அரசுக்கு சொந்தமான பாலத்தின் சுவற்றில் தாமரை சின்னங்கள் வரைந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருவது குறித்து  ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு சென்று புகார் செய்ய சென்றபோது ஞாயிறன்று  அலுவலகம் திறந்த நிலையில் இருந்தது. ஆனால் அலுவலகத்திற்குள் எந்த அலுவலர்களும் இல்லை. ஒன்றிய அரசுக்கு பயந்து  தாமரை சின்னத்தை அழிக்காமல் உள்ளனரா என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ஒட்டன்சத்திரம் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.