டிசம்பர் 25 வெண்மணி தினத்தன்று தியாகிகள் நினைவிடத்தில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பதற்கான நிகழ்வு நடைபெற இருக்கிறது. அதற்கான பயணத்தில் நாகை தெற்கு ஒன்றியம் சார்பில் புதுச்சேரி கிராமத்தில் சந்தா தொகை ஒப்படைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் அனைத்து இடைக் குழுக்களுக்கும் சென்று சந்தா பெறப்பட்டது. பயணத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் என்.வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.