districts

img

வாலிபர் சங்க போராட்ட அறிவிப்பு எதிரொலி சாலையை சமன் படுத்தும் பணி துவக்கம்

திருச்சிராப்பள்ளி, ஜன.18- திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் பல  ஆண்டுகளாக ஆமை வேகத்  தில் நடைபெறுவதால் தெருக்கள் முதல் நவல்பட்டு செல்லும் சாலை வரை அனைத்  தும் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனை சரி  செய்ய வலியுறுத்தி இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம்  சார்பில் ஏர் உழுவும் போராட்  டம் வியாழனன்று நடத்து வதாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், புத னன்று திருச்சி மாநகராட்சி யின் 3ம் மண்டல ஏஇஇ ஜெக ஜீவன் ராம், ஜெஇ ஜோசப்,  41 வது வார்டு மாமன்ற  உறுப்பினர் கோவிந்த ராஜன், எல் அண்டு டி செந்  தில்குமார் ஆகியோர் நவல்  பட்டு ரோடு மற்றும் காம ராஜ் நகர், செல்வபுரம், காந்தி நகர், சுருளிகோயில், சுப்ர மணியபுரம் ஆகிய பகுதி களில் சாலைகளை சீர் செய்து பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்க ளில் மெட்மிக்ஸ் கலவை போட்டு சமன் செய்ய நடவ டிக்கை எடுத்தனர்.  இதுகுறித்து வாலிபர் சங்க மாநகர் மாவட்ட தலை வர் லெனின், பகுதி செயலா ளர் சந்தோஷ், பகுதி நிர் வாகிகள் சுபாஷ், சாதிக், சிபிஎம் உறுப்பினர்கள் முன்  னிலையில் உறுதி அளித்து உடனடியாக பணியை தொடங்கினர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. போராட்ட அறிவிப்பை யொட்டி துரிதமாக நட வடிக்கை எடுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை ஆய்வாளர், மாநக ராட்சியின் அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் வாலிபர் சங்க காட்டூர் பகு திக்குழு சார்பில் நன்றி தெரி விக்கப்பட்டது.