மயிலாடுதுறை, நவ.24- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சி யில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பவுல் சத்தியராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூதனூர் பிள்ளையார் கோவில் பகுதியில், பேருந்து நிழல கத்தைக் கட்டித் தரவேண்டும். வாழைக் கொள்ளைத் தெருவில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் கப்பி சாலையை சீர மைக்க வேண்டும். பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடு களைக் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் அறிவழகன் கண்டன உரையாற்றினார். வாலிபர் சங்கத்தினர் உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.