தொழிலாளர்கள் போராடிப் பெற்ற சட்ட உரிமைகளை ஒன்றிய மோடி அரசு பறித்து கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக சட்டத்தை திருத்தி நிறைவேற்றிய செப்.23-ஐ கருப்பு நாளாக கடைப்பிடித்து மத்திய தொழிற்சங்கத்தினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ஜே.குணசேகரன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா, ஐஎன்டியுசி மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.