districts

தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் பாபநாசம் எம்எல்ஏ வலியுறுத்தல்

பாபநாசம், ஏப்.2- தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு  திரும்பப் பெற வேண்டு மென மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவா ஹிருல்லா வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:  மாநில வளர்ச்சி நாட்டுக்கு உகந்ததாக இருக்காது, அது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்று தமிழக ஆளுநர் ரவி  தெரிவித்திருப்பது கண்டனத் திற்குரியது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்க லைக்கழகத்தின் 22 ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளு நர் ரவி, இந்த கருத்தை தெரி வித்துள்ளார். பிராந்தி யங்கள் என்று கூறப்படும் மாநிலங்களின் வளர்ச்சி ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தும் என  ஆளுநர் கூறியுள்ளது அபத்த மானது. ஒவ்வொரு மாநிலத்திற் கும் அதன் சொந்த பலவீனங் களும், சிக்கல்களும் உள்ளன. கூட்டாட்சி திட்டங் கள் என்பது மாநிலங்களில் உள்ள குடிமக்களின் வருமா னத்தை அதிகரித்தல், வறுமையைக் குறைத்தல், சுகாதாரப் பாதுகாப்பை மேம் படுத்துதல், மாநிலக் கல்வியை மேம்படுத்துதல், உணவின் தரத்தை மேம்ப டுத்துதல், சுற்றுச்சூழல் பிரச் சனைகளைத் தீர்ப்பது, கலாச் சாரம், விளையாட்டு, தொழி லாளர் சந்தையை உருவாக் குதல், பொழுதுபோக்கு பகுதிகளை உருவாக்குதல் மற்றும் அவற்றை மேம்ப டுத்துதல் என்பதாகும். இவை  அனைத்தையும் மேம்படுத்தி வளர்ச்சி அடைய வைப்பது ஒன்றிய அரசின் முக்கியக் கடமையாகும்.  இதனை ஒன்றிய அரசு செய்யத் தவறும் பட்சத்தில் மாநிலங்கள் தனது சொந்த வருவாயில் மேற்குறிப்பி ட்டுள்ளவையை கொண்டு வளர்ச்சிப் பாதையில் பய ணிக்கின்றன. மேலும், நாட்டின் ஒட்டுமொத்த சமூக  மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பிராந்தி யங்களின் வளர்ச்சி முக்கியப்  பங்கு வகிக்கிறது. இதில்  எந்த இடத்திலும் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து மாநில அரசின் கோப்புகளைக் கிடப் பில் போடுவதுடன் மாநிலத் தின் வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டு வரும் ஆளுநர் ரவியை, உட னடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என  வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.