திருச்சிராப்பள்ளி, ஏப்.17 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாநகர மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் புதிய நிர்வாகி கள் தேர்வு ஆகிய முப்பெரும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கவிஞர் இளங்குமரன் தலைமை வகித்தார். விழாவில் ஓவியப்போட் டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓவியர் வெண்புறா பரிசுகளை வழங்கி துவக்க உரையாற்றினார். வாழ்நாள் சாதனையா ளர்கள் விருதை பேராசிரியர் ஜூலியனுக்கு ஓவியர் வெண்புறா, ஓவியர் வெண்புறாவிற்கு எழுத்தாளர் சீத்தா ஆகியோர் வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், சங்க மாவட்ட துணைத்தலைவர் கீரைத்தமிழன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் பாலின், மணிகண்டன், பூவிழி, சாய் மகேஷ், அன்பு மயிலா, சுரேந்தர் ஆகியோர் கவிதை வாசித்தனர். வெற்றி நிலவன் பாடல் பாடி னார். மாவட்ட செயலாளர் ரங்கராஜன் நிறை வுரையாற்றினார். விழாவில் மாநகரத்தின் புதிய தலைவ ராக இளங்குமரன், மாநகர செயலாளராக சிவ. வெங்கடேஷ், பொருளாளராக முருகேஷ் மணி, துணைத் தலைவர்களாக எழுத்தாளர் சீத்தா, பேராசிரியர் ஸ்டாலின், துணைச் செய லாளராக ஓவியர் முத்துக்குமார், நடன கலை ஞர் பிரதாப் மற்றும் 15 பேர் கொண்ட செயற் குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிவ.வெங்கடேஷ் வர வேற்றார். செயற்குழு உறுப்பினர் நாகநாதன் நன்றி கூறினார்.